Header Ads



கொரோனா கட்டுப்பாட்டு திட்டம் பற்றி, மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை


இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பில் தேசிய புலனாய்வுத்துறையினரின் தரவுகளை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் சனிக்கிழமையன்று ஊகடங்களுக்கு இந்த கட்டுப்பாட்டுத் திட்டம் தொடர்பில் தேசிய புலனாய்வுத்துறையினர் விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த வார அமைச்சரவை கூட்டத்தின் போது தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் தமது உறுப்பினர்கள் இந்த கட்டுப்பாட்டுத்திட்டத்தை முன்னெடுத்தமை குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளித்தார்.

இதனையடுத்தே இந்த தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ஊடகங்களுக்கு இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விளக்கமளிக்கவுள்ளனர் என்று பந்துல குணவர்த்தன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.