புறக்கோட்டை மனிங் சந்தை, மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும்
கொழும்பு - புறக்கோட்டை மனிங் சந்தை மேலும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரச தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் மரக்கறிகள் புறக்கோட்டை மனிங் சந்தைக்கு எடுத்துவரப்பட்டே பின்னர் ஏனைய பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிக ஏது இருப்பதாக கூறப்பட்டே மனிங் சந்தை இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூடப்பட்டது.
Post a Comment