Header Ads



கொரோனா நோயாளி தங்கியிருந்த ஹோட்டலில் இருவருக்கு நோய் அறிகுறி

தங்காலை பிரதேசத்தில் சுற்றுலா  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஹோட்டலில் பணியாற்றிய இருவர் நோய் அறிகுறிகளுடன் இன்று (01) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென,  தங்காலை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் கஜதீர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தங்காலைக்குச் சென்றிருந்த குறித்த நபர், கடந்த 15,16,17  ஆம் திகதிகளில் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.