Header Ads



சனூபா காலமானார், கொரொனா பரிசோதனை செய்தபின் ஜனாஸாவை கையளிப்போமென நீர்கொழும்பு வைத்தியசாலை பிடிவாதம்

பலஹத்துறை ஆப்தீன் மாவத்தையை சேர்ந்த காலம் சென்ற மர்ஹூம் கலீல் அவர்களின் மனைவி சனூபா அவர்கள் காலமானார். இவர் காலம் சென்ற மர்ஹூம் அப்துல் காதர் (தக்கியா ஆலிம்சா) ஆலிமின் மகளும், ஜனாப் சபீக் அவர்களின் தாயாரும் ஆவார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொவித்19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொவித்19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கொழும்பில் மீண்டும் பரிசோதனை செய்த பின்னரே ஜனாஸா ஒப்படைக்கப்படும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஜனாஸாவினை சுமூகமான முறையில் பெற்றுக் கொள்ள முயற்சிகள் இடம்பெறுகின்றன.


No comments

Powered by Blogger.