Header Ads



அதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !

இலங்கையில்  இன்று (07.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 183 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது வைத்தியசாலையில் 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கொரோனா தொற்றினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான  42 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.