Header Ads



கொரோனாவுக்கு எதிரான போராட்டம் - ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பாராட்டு


கொரோனா வைரஸூக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பேசியதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கை மற்றும் பிராந்தியங்களில் ஏற்பட கூடிய சுகாதார, பொருளாதார பாதிப்புகள் குறித்து இருவரும் பேசியிருந்தோம்.

அத்துடன், கொரோனா வைரஸூக்கு எதிராக முழு அரசாங்கத்தையும் அணிதிரட்டியமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.