Header Ads



கீழ்த்தர செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள், பற்றி எப்போதும் விழிப்பாக இருங்கள்


"முஸ்லிம்களின் கஞ்சி காய்ச்சும் உரிமையில் கைவைத்தால் வழக்கு தொடரப்படும் - ஆசாத் சாலி எச்சரிக்கை" என்று ஜப்னா முஸ்லிம் இணையத்தையும்,  அதன் பேஸ்புக் பக்கத்தையும் போலியாக பயன்படுத்தி சிலர் இட்டுக்கட்டிய தகவலை பரவ விட்டுள்ளனர்.

எனினும் ஆசாத் சாலி இப்படியொரு கருத்தையோ அல்லது ஜப்னா முஸ்லிம் இணையம் அப்படிப்பட்ட ஓரு தகவலையோ பதிவேற்றம் செய்யவில்லை என மிகவும் பொறுப்புடன் கூறுகிறோம்.

இதற்கு முன்னரும் சஜித் பிரேமதாசா, றிசாத் பதியுதீன், அதாவுல்லா பெயர்களை ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பாவித்து இவ்வாறான போலித் தகவல்கள் பரவ விடப்பட்டன. 

தற்போது  ஆசாத் சாலி குறிப்பிட்டதாக இந்தத் தகவல் பரவ விடப்பட்டுள்ளது.

தான் இதுபோன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்பதை அறிவித்துக் கொள்வதாக ஆசாத் சாலி குறிப்பிட்ட அதேவேளை, பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில முஸ்லிம்களே இந்த கீழ்த்தரமான  வேலையை முன்னெடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும் வாசகர்களுக்கு நாம் கூற விரும்புவது யாதெனில், இதுபோன்ற தகவல்களை கண்டால் உடடியாக www.jaffnamuslim.com இணையத்திற்கு நேரடியாக வாருங்கள். அங்கு பேஸ்புக்கில் பரப்பப்படும் தலைப்பில் செய்தி ஏதேனும் காணப்படுகிறதா என நோக்குங்கள். அப்படி இல்லையாயின் அது போலிச் செய்தி என தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறான கீழ்த்தர செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் பற்றி எப்போதும் விழிப்பாக இருங்கள்.

இதுபோன்ற போலிகளை பரவச்செய்து, சமூகத்தை குழப்பி, அதில் மனமகிழுபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்...!

www.jaffnamuslim.com

1 comment:

  1. உன்மை எமக்குல்லும் சில துரோகிகள் உள்ளனர்.இந்த துரோகிகள் தற்போது இனவாதிகலுடன் கை கோர்த்து கொண்டு எமது சமூகத்தின் ஒவ்வொரு உரிமையையும் அழிப்பதுடன் மாத்திரமல்லாது சமூகத்துக்காக குரல் கொடுப்பவர்கலையும் காட்டிக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டும் அதனூடாக பதவி,பனம் திரட்டி கொண்டு வாழும் இவர்கள் பினந்தின்னி கழுகுகல்.

    ReplyDelete

Powered by Blogger.