Header Ads



அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

பிறக்கவிருக்கும் புத்தாண்டில் சம்பிரதாய முறைகளுக்கு அன்றி, மருத்துவ ஆலோசனைகளுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வெடருவே உப்பாலி தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், புதுவருடத்தின்போது சம்பிரதாய நடைமுறைகளை நிறைவேற்றும்போது, பொதுமக்கள் வரையறைகளுடன் செயற்பட வேண்டும் என மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.