மாஸ்க் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் கிடையாது
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என புவனேஷ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என புவனேஷ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறுகையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல் பங்க்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இனி கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும். அப்படி மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவை வழங்கப்படாது.
எங்கள் பணியாளர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களை காக்கவும், வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
Post a Comment