Header Ads



அமெரிக்க பத்திரிகைகளில் குவியும், பலியானவர்களின் இரங்கல் செய்திகள்


அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் பத்திரிகையில், கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அங்கு மாசாசூசெட்ஸ் மாகாணத்தில், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதுவரை சிகிச்சை பலனின்றி 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அங்கு வெளியாகும் 'பாஸ்டன் குளோப்' பத்திரிகையில், 15 பக்கங்களுக்கு காலமானார் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த பலரும் கவலை தெரிவித்தனர். இத்தாலியிலும் இதே போல் பலியானர்வர்களின் விவரங்கள் அதிக பக்கங்களில் வெளியானதை பலரும் நினைகூர்ந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.