புத்தளத்தில் நடமாடும் ATM சேவை
புத்தளம் நகரில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நேரங்களில், வங்கிகளில் பணத்தை பெற முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கி நடமாடும் சேவையை இன்று (16) புத்தளத்தில் முன்னெடுத்திருந்தது.
ஏ.டி.எம். இயந்திரத்தின் மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
புத்தளம் வான் சந்தி, வெட்டுக்குளம் சந்தி மற்றும் நூர் பள்ளி சந்தி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை இன்று (16) முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் நலன்கருதி அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே பணத்தை பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக, முகாமையாளர் எம்.ஐ.எம். பர்ஹான் தெரிவித்தார்.
எம்.யூ.எம்.சனூன்
இது ஒரு வரவேற்கத்தக்க சேவை இலங்கையில் உள்ள எல்லா வங்கிகளும் இதே போல் செயல்பட்டால் மக்களுக்கு இந்த கடினமான நேரத்தில் பணத்தை பெற்றுக்கொள்ள இலகுவாக இருக்கும்
ReplyDelete