இன்று இதுவரை 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
இலங்கையில் இன்று 27 ஆம் திகதி இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 582 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 449 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 295 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 126 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment