Header Ads



59 பேர் பூரணமாக, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூன்று பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி தற்போது வரை 59 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதேவேளை நேற்றைய தினம் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 218 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். 

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 152 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.