ஒரு லட்சத்து 44 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை 44 ஆயிரத்தை கடந்தது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 21 லட்சத்து 45 ஆயிரத்து 512 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 14 லட்சத்து 56 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 58 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 137 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரம் பின்வருமாறு:-
அமெரிக்கா - 33,903
ஸ்பெயின் - 19,130
இத்தாலி - 22,170
பிரான்ஸ் - 17,920
ஜெர்மனி - 3,867
இங்கிலாந்து - 13,729
சீனா - 3,342
ஈரான் - 4,869
துருக்கி - 1,643
பெல்ஜியம் - 4,857
கனடா - 1,191
நெதர்லாந்து - 3,315
பிரேசில் - 1,769
சுவிஸ்சர்லாந்து - 1,281
ஸ்வீடன் - 1,333
Post a Comment