Header Ads



கொரோனா தொற்றாளர்கள் 414 ஆக அதிகரிப்பு - இன்றைய தினம் இதுவரை 46 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 414 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை வீரர்கள் 30 பேர் உள்ளடங்குகின்றனர் என, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

முன்னதாக குறித்த முகாமை சேர்ந்த 30 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் இதுவரை குறித்த முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் இதுவரை 46 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.