40,223 பேர் பலி - கலக்கம் அடைந்துள்ள அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 13 ஆயிரத்து 556 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், தற்போதைய நிலவரப்படி, வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் 40 ஆயிரத்து 223 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதால் அமெரிக்க மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
Post a Comment