Header Ads



மரண சடங்கில் கலந்துக்கொண்ட 2 பிக்குகள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் தேசிய காய்ச்சல் மருத்துவமனையான ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் நாத்தாண்டிய பிரதேசத்தில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் மரண சடங்கொன்றில் கலந்துக்கொண்ட விகாராதிபதி ஒருவரும், பிக்கு ஒருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியும் அதே விகாரையில் வதியும் பிக்கு ஒருவருமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாதம்பை சுகாதார அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் காணப்படும் நிலைமையை கவனத்தில் கொண்டு நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக தலவாக்கலை லிந்துலை நாகசேன ஸ்ரீ மகிந்தாராம விகாரை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.