Header Ads



கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளத்திற்கு 27 ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு

கொழும்பு, கம்பஹா களுத்துறை புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுவதாக கூறப்பட்டு இருந்தபோதிலும் அதில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் குறித்த மாவட்டங்களுக்குள் எவருக்கும் உள்நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.