கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளத்திற்கு 27 ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு
கொழும்பு, கம்பஹா களுத்துறை புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுவதாக கூறப்பட்டு இருந்தபோதிலும் அதில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் குறித்த மாவட்டங்களுக்குள் எவருக்கும் உள்நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment