Header Ads



கொழும்பு துறைமுகத்தில் 26,000 கொள்கலன்கள் தேக்கம்

(இரா.செல்வராஜா)

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 26 ஆயிரம் கொள்கலன்கள் தேங்கியிருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் சுமார் 30 ஆயிரம் கொள்கலன்களை களஞ்சியப்படுத்தக் கூடிய வசதிகள் இருப்பதாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் தயா ரத்னாயக்க  தெரிவித்தார்.

தற்போது துறைமுகத்தில் தேங்கியிருக்கும் கொள்கலன்களை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதேவேளை கப்பல்களுக்கு பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்கும் பணிகள் வழமையைப் போல் இடம்பெறுகின்றன.

இதற்கான போதியளவான ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.