Header Ads



226 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இதுவரை 226 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இவர்களில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 79 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 622 ஆக  அதிகரித்துள்ளது. 

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 134 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர். 

தற்போது 481 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.