மனைவி சொன்னதை கேட்டிருந்தால், எனக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது
மனைவி சொன்னதை கேட்டிருந்தால் தனக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது என விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டவர், மனைவி சொன்னதை கேட்காமையினால் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இனிமேல் மனைவியின் அனுமதியின்றி எந்தவொரு விடயத்தையும் செய்ய மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment