Header Ads



வெளிநாடுகளில் உள்ள 215 மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை

கொரோனா தொற்றால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 215 மாணவர்களை பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வரையறுக்கப்பட்ட விமான நிலையம், விமான சேவை நிறுவனத்தின் நடவடிக்கை பணிப்பாளர் செஹான் சுமணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய முதலில் சார்க் வலய நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.