Header Ads



கணவாய் ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் மரணம் - 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி


கணவாய் உணவு உண்டதில் உணவு ஒவ்வாமையினால்  11 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சோர்ந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

கல்லடி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த  தரம் 7 ஆம்  ஆண்டில் கல்வி கற்கும் 11 வயதுடைய அன்புதாஸ் கோகுல் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

குறித்த பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் வாழ்ந்து வருகின்றனர். 

இந் நிலையில் கடந்த சனிக்கிழமை (18) திகதி வீதியால் வந்த மீன் வியாபாரி ஒருவரிடம் கணவாய் மீனை வாங்கி உயிரிழந்த சிறுவனின் தாயார் சகோதரன் ஆகியோரை தவிர ஏனைய 5 பேர் அன்று பகல் உணவாக சமைத்து சாப்பிட்டனர். 

இதனையடுத்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. 

இந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ள நிலையில் நோய் குணமடையாத காரணத்தால் திங்கட்கிழமை குறித்த  சிறுவன் மற்றும் சிறுவனின் அம்மம்மா, அம்மப்பா ஆகியோர் மட்டு போதன வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவல் அனுமதிகப்பட்டு சிகிச்சை இடம்பெற்று வந்தன. 

இதன் பின்னர் இன்று சிறுவனின் தந்தையார் மாமனார் ஆகியோர் கணவாய் உணவு ஒவ்வாமையினால் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று  (23) பகல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

No comments

Powered by Blogger.