Header Ads



ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது - தயாசிறி

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அடுத்த கூட்டணியும் பொதுத் தேர்தலில் மாபெரும் தோல்விக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்க்கட்வி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கூட்டணி ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணிக்கு சவாலாக அமையும் என்று சு.க. கருதுகிறதா என்று வினவிய போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியில் பின்பற்றப்பட்டு வந்த ஒழுக்கம் சிதைக்கப்பட்டு தற்போது அந்த கட்சி பாரிய பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

சின்னம் தொடர்பில் தீர்வு காணப்படாமல் தொலைபேசியை சின்னமாக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது. 

வரலாற்றில் இது போன்றதொரு சின்னத்தை ஐ.தே.க. முதல் தடவையாக தெரிவு செய்துள்ளது. உண்மையில் அந்த கட்சியின் தற்போதைய நிலைவரம் கவலையளிப்பதாகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.