Header Ads



கொரோனா அச்சம், முடங்கியது அம்பாறை மாவட்டம்


கொரோனா அச்சம் காரணமாக அரசாங்கத்தால் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று (17) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு போன்ற அம்பாறை மாவட்டத்தின் எல்லா பிரதேச அரச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. 

போக்குவரத்து சன நடமாற்றமற்று வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இப்பிரதேச மக்கள்  அச்சத்தின் காரணமாக வெளியில் வராமல் வீட்டில் முடங்கியிருக்கின்ற நிலையில் வெளியில் சன நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகின்றது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.