Header Ads



மகிந்த வேட்புமனுவில் கையெழுத்திடும் போது, சிலர் விரும்பாத நபர்களும் கலந்துக்கொண்டனர் - பசில்

அரசியலில் விருப்பமான நபர்களை மட்டுமல்லாது விருப்பம் இல்லாத நபர்களையும் இணைத்துக்கொள்ள நேரிடும் எனவும் சில சந்தர்ப்பங்களில் மன்னிப்பும் வழங்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது வேட்புமனுவில் கையெழுத்திடும் போது பொதுஜன பெரமுனவின் சிலர் விரும்பாத நபர்களும் கலந்துக்கொண்டனர். இப்படியான சந்தர்ப்பங்களில் விருப்பம் இல்லை என்றாலும் விரும்ப நேரிடும் எனவும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று -11- நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கொடுக்க வேண்டிய நேரத்தில் மன்னிப்பை வழங்க வேண்டும். எனினும் நடந்த எதனையும் மறக்காமல் இருப்பது முக்கியமானது. அனைத்தையும் மறந்து விட்டு ஒரு பயணத்தை செல்ல முடியாது எனவும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. He should lead it for others with respect.. He will be in power till he dies. So bad..
    Did any one did this before him..

    ReplyDelete

Powered by Blogger.