Header Ads



தோல்வியடைந்து நெருக்கடியில் இருக்கும் நிலையிலே அரசியல்வாதிகளின் உண்மை தன்மையினை அறிந்துக் கொள்ள முடியும்

(இராஜதுரை ஹஷான்)

அரசியல்வாதிகளை அதிகாரத்தில் இருக்கும் போது  அடையாளப்படுத்த முடியாது. தோல்வியடைந்து நெருக்கடியில் இருக்கும் நிலையிலே அரசியல்வாதிகளின் உண்மை தன்மையினை  அறிந்துக் கொள்ள முடியும்.  இதற்கு   இராஜாங்க அமைச்சர்  மஹிந்தானந்த அளுத்கமகே சிறந்த  எடுத்துக்காட்டு. 

அதிகாரம் இல்லாத வேளையிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட்டார். தனது  பிரதேசத்தின்  அபிவிருத்திக்காக தொடர்ந்து  நெருக்கடிகளையும், கோரிக்கையினையும்கொடுத்தவர் எனபிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மின்வலுத்துறை அமைச்சர்   மஹிந்தானந்த அளுத்தகமவின்  அரசியல் பயணத்தின் 30 ஆவது வருட  பூர்த்தி  நிறைவினை    கொண்டாடும் விதமான  ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வு  ஜனாதிபதி, பிரதமர்  தலைமையில் இன்று கண்டி நகரில்  உள்ள நட்சத்திர ஹோட்டலில் இடமபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துக் கெண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1 comment:

  1. இந்த நிகழ்சிகள் எல்லாம் யாருடைய பணத்தில் நடத்தப்படுகின்றது? எத்தனையோ ஏழை மக்கள் சாப்பிட இல்லாமல் இருக்கின்றார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.