Header Ads



கொரோனா பற்றிய வர்த்தமானி - தனிமைப்படுத்தலுக்குரிய நோய் என பிரகடனம்

கொவிட் - 19 வைரஸ் நோய், தனிமைப்படுத்தலுக்குரிய நோய் என சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுளளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.