Header Ads



வீதி வீதியாக அலையவிட போவதாக கூறியோர், தற்போது கூட்டணியில் அங்கம்

புதிய கட்சியை ஆரம்பித்தால், வீதி வீதியாக அலைய விட போவதாக கூறியோர் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும் இது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகார சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினரை கைவிட்டு கொழும்புக்கு செல்லாது, ஹம்பாந்தோட்டையிலேயே இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனியாக பிரிந்து சென்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்க முயற்சித்த போது, அன்றைய ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, புதிய கட்சியை தொடங்கினால், வீதி, வீதியாக அலைய விட போவதாக கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.