Header Ads



பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” விழக்கூடும்

பொய்களை பரப்புவோர் தலைகளில்  “கோடை இடி” தான் விழக்கூடும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சில கோவில்களின் கோபுரக் கலசங்கள் இடிந்து விழுந்துவிட்டதாக, இன்று அதிகாலை முதல் பரப்பப்பட்டு வரும் செய்தி தொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

நாட்டின் இந்து கோவில்களின் கோபுரக் கலசங்கள் இடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது என்றும் அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள கொரோனா வைரஸ் எனும் தேசியப் பிரச்சினை வேளையில் இத்தகைய பொறுப்பற்றப் பொய்களைப் பரிமாறி, நெடிக்கடியைக் கூட்டி விளையாடவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“இத்தகைய பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும் எச்சரிக்கை!!!“ என்று அவர் மேலும் பதவிட்டுள்ளார்.

1 comment:

  1. அப்படியென்றால் புவக்பிடிய தோட்ட பாடசாலையில் முஸ்லீம் ஆசிரியைகளுக்கு எதிராக தமிழ் இனவாதிகள் செயற்பட்டதை இல்லையென்று மறைத்த உன் தலையில் இடி விழுந்த பின்புதான் மற்றவர்களுக்கு விழும்

    ReplyDelete

Powered by Blogger.