புத்தளத்திற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம்,கிடைக்க வேண்டுமென்பதை உணர்கிறேன் - சஜித்
புத்தளம் சிவில் சமூகத்திற்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது புத்தளம் மாவட்டம் ஏன் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டுமென சிவில் சமூகத்தினர் சஜித் பிரேமதாசாவுக்கு விளக்கியுள்ளனர்.
அவற்றை செவிமடுத்த சஜித்,
தாம் ஓர தேசியக் கட்சி என்றவகையில் தமது கட்சி சார்பில் சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் இறக்கப்படுவார்கள் எனவும், கடந்த காலங்களில் முஸ்லிம் தலைவர்களை சிங்கள மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பியதையும் சட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் புத்தளம் தொகுதியிலிருந்து ஓர முஸ்லிம் பிரதிநிதி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டியதை தாம் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment