Header Ads



கொரோனாவினால் இத்தாலி சிறைச்சாலையில் கலவரம் - 6 பேர் உயிரிழப்பு


இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக அந்நாட்டில் சிறைச்சாலை ஒன்றில் நடந்த கலவரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள மொடேனா நகரில் உள்ள சிறைச்சாலையில் ஒரு பிளாக்குக்கு அங்குள்ள கைதிகள் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சிறைச்சாலையில் கைதிகளை பார்க்க வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் தீவைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், அந்நாட்டில் கோவிட்-19 தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்ந்து 7,375ஆக அதிகரித்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.