Header Ads



தாஜூடினை கொலை செய்யும் போது அவரின் பிள்ளை தொடர்பில் ஒன்றும் தோன்றவில்லையா..?


ரக்பி வீரர் வசீம் தாஜூடின், வெளியிட்ட கருத்தொன்றினாலேயே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார் என்று பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


இன்றைய (09)  நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


ஒரு முக்கியமான கருத்தினை வெளியிட்டதால் வசீம் தாஜூடின் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அந்தக் கருத்தினை நான் இங்கு வெளியிட விரும்பவில்லை. அந்த வார்த்தை என்ன என்பது படுகொலையாளிகளுக்கு தெரியும். வசீம் தாஜூடின் சொன்ன அந்தக் கருத்து உண்மையாக இருக்கலாம்.


நாமல், யோசித்த, ரோஹித்த ஆகியோருக்கு அன்று தாஜூடினை கொலை செய்யும் போது அவரின் பிள்ளை தொடர்பில் ஒன்றும் தோன்றவில்லையா?  இன்று பிள்ளை பாசம் தொடர்பில் கதைப்பதற்கு இவர்களெல்லாம் வெட்கப்பட  வேண்டும்.


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் இந்த அரசு பலிவாங்குவதாக கூறிய கருத்தை துக்கி பிடித்துக் கொண்டு பிள்ளை பாசம் தொடர்பில் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்  என குறிப்பிட்டுள்ளார். 


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.