Header Ads



கொரோனாவுக்கு பலியானோர் 4026 ஆக உயர்ந்தது


சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. 

சீனாவில் நேற்று மேலும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3024 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4026 ஆக உயர்ந்திருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதுதவிர ஈரான், தென்கொரியா அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 1 இலட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.