வன்னியில் 2 ஆசனங்களைப் பெறுவோம் - மஸ்தான்
வன்னி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த இரு ஆசனங்களைப் பெறுவோம் என பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சி சார்பில் அரசியலில் அனுபவம் உள்ளவர்களையும், இளைஞர்களையும் உள்வாங்கி தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
தென்பகுதியில் அறுதிப் பெரும்பான்மை எடுக்கக் கூடிய நிலமை இருக்கின்றது. அதேபோல் இம்முறை வன்னி மாவட்டத்திலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறக் கூடிய வியூகங்களை வகுத்துள்ளோம்.
எமது கட்சியில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தூர நோக்கில் வன்னி மக்களினுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அவர்கள் அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையை செயற்படுத்த மக்கள் ஆணையைத் தருவார்கள்.
அதற்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சியில் வெற்றி பெறுவார்கள். அத்துடன், சுதந்திரக் கட்சி தனியாக போட்டியிடுமோ தெரியாது.
ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும் ஒழுங்கான முடிவாக எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடாது என நினைகின்றேன்.
மேலும், கட்சியின் உயர்மட்ட முடிவுகளின் படியே செயற்படுகின்றோம். எமது தலைமையின் செயற்பாடுகளை பார்த்து பலர் தமக்கு ஆசனங்களை வழங்குமாறு கோரினார்கள்.
கட்சி இணங்கண்டு வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளது என்றார்.
உண்மைதான் மஸ்தான் அவர்களே. திருவள்ளுவரும் உங்கள் பக்கம்தான், இதோ
ReplyDeleteகான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது