இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு, எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம்..
இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றது.
தொடர்ந்தும் குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் அதேவேளை, தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
அத்துடன் இலங்கையில்; தங்கியிருக்கும் சீன பிரஜைகளுக்கும் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம்.
முன்னதாக அவர்களுடன் இருந்த நட்புறவை தொடர்ந்தும் பேணுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDeleteIf Pawithra gives a demonstration, guarantee of having Chinese around her, then the Public also will do the same without hesitation.
ReplyDelete