பௌத்த தேரர்களை அரசியலுக்கு, வரவேண்டாமென கோரிக்கை
பௌத்த தேரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டியவில் அமைந்துள்ள விகாரையில் உரையாற்றிய போதே அவர் இக்கருத்தினை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது பேசிய அவர், சமய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, அடுத்த சந்ததியினரின் நல்வாழ்வுக்காக பாடுபட வேண்டும்.
அதேபோன்று, பௌத்த தேரர்கள் அரசியலுக்கு வருவது விரும்பத்தக்கது அல்ல. அவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே சிறந்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment