Header Ads



இன, மத, குல பேத­மின்றி சுதந்­தி­ரத்­திற்­காக தம்மை அர்ப்­ப­ணித்தவர்களுக்கு தேசத்தின் கௌரவம் கிடைக்­க வேண்டும்

இன, மத, குல பேத­மின்றி நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக தம்மை அர்ப்­ப­ணித்த அனை­வ­ருக்கும் தேசத்தின் கௌரவம் கிடைக்­கப்­பெற வேண்டும் என தெரி­வித்­தி­ருக்கும் எதிர்க்­கட்சித்தலைவர் சஜித்  பிரே­ம­தாச ஒற்­று­மை­யுடன் முன்­னோக்கி  பய­ணிப்­பதே வர­லாறு கற்­றுத்­தந்­துள்ள பாடம் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். 

72  ஆவது  சுதந்­திர தின வாழ்த்துச் செய்­தியில்  இதனை  தெரி­வித்­தி­ருக்கும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: 

சகல பேதங்­க­ளையும் மறந்து எல்­லோரும் ஒன்­றி­ணைந்து கூட்­டான  போராட்­டத்தின் பெறு­பே­றாக 1948  ஆம் ஆண்டில்  இலங்கை  கால­னித்­துவ  ஆட்­சியின்  கோரப்­பி­டி­யி­லி­ருந்து சுதந்­திரம் பெற்­றது. 72 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் நாம் பெற்ற அந்த சுதந்­தி­ரத்தை இன்­றைய தினம் பெரு­மி­தத்­துடன் கொண்­டா­டுவோம்.

சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பல­த­ரப்­பட்ட போராட்­டங்­களின்போது உயிர்த்­தி­யாகம் செய்த போரா­ளி­களை  இச்­சந்­தர்ப்­பத்தில் மிகவும் பெரு­மை­யு­டனும்  கௌர­வத்­து­டனும் நினைவுகூருதல் வேண்டும். அவர்­க­ளு­டைய உயிர்மூச்சு இந்த நாட்டின் சிரேஷ்ட வர­லாற்றின் அதி உன்­னத குறிப்­புக்­க­ளாகும். 

இன, மத, குல, சாதி போன்ற  பேதங்­க­ளின்றி  ஒன்­றாக  இணைந்து இந்த நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக  அர்ப்­ப­ணித்­துள்ள  அனை­வ­ருக்கும்  தேசத்தின்  கௌரவம்  கிடைக்­கப்­பெ­றுதல் வேண்டும். 

வர­லாறு எமக்கு  கற்­றுத்­த­ரு­கின்ற  பாட­மாக  இருப்­பது  ஒற்­று­மை­யுடன்  முன்­னோக்கி  பய­ணிப்­ப­தை­யே­யாகும்.  எனினும், நாடு என்ற  வகையில்  பெற்­றுக்­கொண்ட  வெற்­றிகள், அடைந்த  பின்­ன­டை­வுகள்  மற்­று­மல்­லாது தோல்­விகள்  போன்­ற­வற்­றைத்­தாண்டி கடந்துசென்ற  72 வரு­டங்­களின்  போது எமக்கு பல்­வே­று­பட்ட  அனு­ப­வங்­களை  வழங்­கு­கின்­றது.  

முற்­போக்கு சிந்­த­னை­யோடு அபி­மா­ன­மிகு  வர­லா­றொன்­றைக்­கொண்ட  நாடொன்­றாக  உல­கிற்கு  முன்­மா­தி­ரி­யொன்றை  வழங்­கி­யுள்ள இலங்­கை­யா­னது  தற்­பொ­ழுது அர­சியல்  சந்­தர்ப்­ப­வா­தத்­திற்கு   இரை­யாக்­கப்­பட்ட  பலி­பீ­ட­மாக உரு­வெ­டுத்­துள்­ளது.  அவ்­வாறு  நோக்கும்போது  கால­னித்­துவ  ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டைந்­த­மை­யைத்­த­விர  இந்­நாட்டு மக்கள் அடைந்துகொள்ள  இன்னும்  அனேக  விட­யங்கள் இருக்­கின்­றன.  

அர­சியல்  பழி­வாங்­கல்கள் இல்­லாத  நாடொன்று, பொரு­ளா­தார, அர­சியல்,  கலா­சார  மற்றும் சிவில்  சுந்­தி­ரத்­தைப் ­பா­து­காப்­ப­தற்­கான சுபீட்­சம்­மிகு நாடொன்று, உலகில்  கௌர­வத்­துடன் தலை­நி­மிர்ந்து  நிற்­க­க்கூ­டிய  நாடொன்றை  உருவாக்குவதற்கான போராட்டம்  இன்னும்  முடியவில்லை.  

அந்நோக்கத்திற்காக எல்லா  நேரங்க ளிலும் அர்ப்பணிப்புச் செய்யும்  உயர் அபிலாசைகள்  நிறைந்த, கௌரவமான சுதந்திர தினமொன்றுக்காக  முழு நாட்டுக்கும்  பிரார்த்திக்கின்றேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளார்.

1 comment:

  1. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.