இன, மத, குல பேதமின்றி சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு தேசத்தின் கௌரவம் கிடைக்க வேண்டும்
இன, மத, குல பேதமின்றி நாட்டின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் தேசத்தின் கௌரவம் கிடைக்கப்பெற வேண்டும் என தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஒற்றுமையுடன் முன்னோக்கி பயணிப்பதே வரலாறு கற்றுத்தந்துள்ள பாடம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
72 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்திருக்கும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சகல பேதங்களையும் மறந்து எல்லோரும் ஒன்றிணைந்து கூட்டான போராட்டத்தின் பெறுபேறாக 1948 ஆம் ஆண்டில் இலங்கை காலனித்துவ ஆட்சியின் கோரப்பிடியிலிருந்து சுதந்திரம் பெற்றது. 72 வருடங்களுக்கு முன்னர் நாம் பெற்ற அந்த சுதந்திரத்தை இன்றைய தினம் பெருமிதத்துடன் கொண்டாடுவோம்.
சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பலதரப்பட்ட போராட்டங்களின்போது உயிர்த்தியாகம் செய்த போராளிகளை இச்சந்தர்ப்பத்தில் மிகவும் பெருமையுடனும் கௌரவத்துடனும் நினைவுகூருதல் வேண்டும். அவர்களுடைய உயிர்மூச்சு இந்த நாட்டின் சிரேஷ்ட வரலாற்றின் அதி உன்னத குறிப்புக்களாகும்.
இன, மத, குல, சாதி போன்ற பேதங்களின்றி ஒன்றாக இணைந்து இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் தேசத்தின் கௌரவம் கிடைக்கப்பெறுதல் வேண்டும்.
வரலாறு எமக்கு கற்றுத்தருகின்ற பாடமாக இருப்பது ஒற்றுமையுடன் முன்னோக்கி பயணிப்பதையேயாகும். எனினும், நாடு என்ற வகையில் பெற்றுக்கொண்ட வெற்றிகள், அடைந்த பின்னடைவுகள் மற்றுமல்லாது தோல்விகள் போன்றவற்றைத்தாண்டி கடந்துசென்ற 72 வருடங்களின் போது எமக்கு பல்வேறுபட்ட அனுபவங்களை வழங்குகின்றது.
முற்போக்கு சிந்தனையோடு அபிமானமிகு வரலாறொன்றைக்கொண்ட நாடொன்றாக உலகிற்கு முன்மாதிரியொன்றை வழங்கியுள்ள இலங்கையானது தற்பொழுது அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இரையாக்கப்பட்ட பலிபீடமாக உருவெடுத்துள்ளது. அவ்வாறு நோக்கும்போது காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்தமையைத்தவிர இந்நாட்டு மக்கள் அடைந்துகொள்ள இன்னும் அனேக விடயங்கள் இருக்கின்றன.
அரசியல் பழிவாங்கல்கள் இல்லாத நாடொன்று, பொருளாதார, அரசியல், கலாசார மற்றும் சிவில் சுந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சுபீட்சம்மிகு நாடொன்று, உலகில் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய நாடொன்றை உருவாக்குவதற்கான போராட்டம் இன்னும் முடியவில்லை.
அந்நோக்கத்திற்காக எல்லா நேரங்க ளிலும் அர்ப்பணிப்புச் செய்யும் உயர் அபிலாசைகள் நிறைந்த, கௌரவமான சுதந்திர தினமொன்றுக்காக முழு நாட்டுக்கும் பிரார்த்திக்கின்றேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளார்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDelete