ஹிஸ்புழ்ழாஹ் மு.கா. இல் இணைகிறாரா..? வதந்தி என்கிறார் அவர்
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனைவதற்கான பேச்சு வார்த்தை நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பபட்டு வருகின்றது.
இது தொடர்பாக கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஊடகப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்ட போது
" இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை, இது அப்பட்டமான பொய்யாகும். என்மீது சேறு பூசுவதற்காக சில விஷமிகளால் இந்த செய்தி பரப்ப பட்டுவருகின்றது இதனால் யாரும் குழப்பமடைய தேவையில்லை"
என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
Post a Comment