நாளைய தினம் செயற்குழு கூட்டம், புதிய முன்னணி அமைக்கும் பணிகளில் சஜித்
ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒப்புதல் நாளை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயற்குழு கூட்டத்தில் வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் அவர் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேர்தலில் களமிறங்குவது குறித்து கட்சி முடிவெடுக்கும்.
அத்துடன் கட்சியின் நாடாளுமன்றக்குழு ஏற்கனவே முன்னணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை தெரிவு செய்துள்ளமையால் அவருக்கான ஒப்புதலும் நாளை வழங்கப்படும்.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணிக்கு அப்பால் புதிய முன்னணி ஒன்றை அமைக்கும் பணிகளில் சஜித் பிரேமதாச தரப்பு ஈடுபட்டு வருகிறது.
Post a Comment