Header Ads



முதலாம் தவனையில் பரீட்சைகளை நடத்தாதிருக்க தீர்மானம், கல்வி அமைச்சு

முதலாம் தவனையின் போது விளையாட்டு மற்றும் வேறு வெளிவாரி செயற்பாடுகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கத் தீர்மானித்துள்ள கல்வி அமைச்சு, இரண்டாம்  , மூன்றாம் தவனைகளில் மாத்திரம் பரீட்சைகள் நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.

முதலாம் பாடசாலை தவனை காலங்களின் போது அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்வி சுற்றுலா, கண்காட்சி, மாபெரும் கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு செயற்பாடுகள் முன்கெடுக்கப்படுமெனவும் அதனால்,    முதலாம் தவனை பரீட்சையின் போது மாணவர்கள் எவ்வித முன் ஏற்பாடுகளும்  இன்றியும் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தயார் இல்லாமல் பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கும் நிலைமை காணப்படுவதாகவும் ​அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  

இந்த நிலைமைக் காரமாண மாணவர்கள் பரீட்​சைகளில் தோற்றும் அச்சத்தில் விளையாட்டுச் செயற்பாடுகளில் பங்கெடுப்பதில்லை என்றும், இவ்வாறான காரணங்களை கருத்தில் கொண்டே முதலாம் தவனையில் பரீட்சைகளை நடத்தாதிருக்க தீர்மானித்திருப்பதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.