Header Ads



சாய்ந்தமருதில் இன்று இரட்டை மகிழ்ச்சி - பால்சோறு பொங்கவைத்து கொண்டாட்டம்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபைப் பிரமாணம் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றுநள்ளிரவு வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்தும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பீ தரத்திலிருந்து இன்று முதல் ஏ தரத்திலான பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதனையும் சிறப்பிக்கும் வகையில் கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் பால் சோறு பொங்கவைத்து பொதுமக்களுக்கு வழங்கி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மாளிகைக்கடு - சாய்ந்தமருது சநதியில் மிகவும் பிரமாண்டமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

No comments

Powered by Blogger.