,வவுணதீவில் பொலிஸ் சார்ஜன், அடித்துக் கொலை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் 0770439397
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாம்கட்டை ஆயித்தியமலை வீதியில் பொலிஸ் சாஜன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை(06ம் திகதி) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு போலீஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன் 3ம் கட்டையில் உள்ள தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக புதன்கிழமை இரவு வந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இவர் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவராவார்.
இவரது மரணம் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்களுடன், சோக்கோ பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விஷேட அதிரடிப்படை உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாம்கட்டை ஆயித்தியமலை வீதியில் பொலிஸ் சாஜன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை(06ம் திகதி) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு போலீஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன் 3ம் கட்டையில் உள்ள தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக புதன்கிழமை இரவு வந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இவர் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவராவார்.
இவரது மரணம் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்களுடன், சோக்கோ பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விஷேட அதிரடிப்படை உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொலிசிக்கே பாதுகாப்பில்லை! எவ்வாறு நம் நாட்டில் பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வது?
ReplyDeleteshame on Sri Lankans. Some are so bad
ReplyDeleteமுன்னர் வவுணதீவு பொலிசார் பயங்கரவாதிகளால் கொல்லபட்டிருக்கிறார்கள். இது அதனோடு சம்பந்தமில்லாத தனி நிகழ்வாகவும் இருக்கலாம். அல்லது புதிய சமிஞையாகக்கூட இருக்கலாம்.
ReplyDelete