தட்டைப்பயறு இறுகியதில், குழந்தை உயிரிழப்பு
தட்டைப்பயறு சுவாச குழாயில் இறுகியதில் ஒரு வயதும் 8 மாதங்களுமான பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஓம்பரஹேனகெதர, அத்துலுவில, ஹோரன்கல்ல, தல்கஸ்வில பிரதேசத்தை சேர்ந்த காரியவசம் லொக்குகமகே எசதி அயன்சா என்ற குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.
காலி காரப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட திடீர் மரண விசாரணையின் போதே இது தெரியவந்துள்ளது.
குழந்தையின் மரணம் தொடர்பிலான மரண பரிசோதனைகளை காலி நகர திடீர் மரண விசாரணை அதிகாரி மருத்துவர் பீ.ஜீ.என் கருணாதிலக்க மேற்கொண்டுள்ளார்.
Post a Comment