ஜனாதிபதியும், பிரதமரும் நன்றி மறக்காதவர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் கவலைக்குரியது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹூங்கம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.
அப்படியான கட்சியை எதிரியை போன்று கருதி செயற்படுவதை அனுமதிக்க முடியாது.
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நன்றி மறக்காதவர்கள் என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment