29 தடவைகள் ரணில் தோல்வியடைந்தார், சஜித் இதனைவிட அதிகமாக தோல்வியடைவார்
பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சவால் இல்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -25- நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவை நாடு முழுவதும் அழைத்துச் சென்று கோட்டாபயவை தோற்கடிக்கக் கூடிய ஒரே தலைவர் எனக் கூறினார்கள். இறுதியில் வெளியிட்ட அனைத்து கருத்துக்களின் காரணமாகவும் அவருக்கு வாக்குகள் குறைந்து போனது.
சஜித் பிரேமதாச முதிர்ச்சியான அரசியல்வாதி அல்ல. 29 தடவைகள் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். எனினும் சஜித் இதனைவிட அதிகமாக தோல்வியடைவார் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment