Header Ads



காலி கடற்பரப்பில் : 1180 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

காலி கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 1180 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

68 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

1 comment:

  1. ​ஹெரோயின்,ஐஸ் போதைப்பொருளில் நாட்டைத் தன்னிறைவுக்குக் கொண்டுவர இந்த நாட்டு மக்கள் எவ்வளவு தியாகம் செய்கின்றனர் என்பதை இந்த கடற்படையின் முயற்சியில் தௌிவாகத் தெரிகிறது. இந்த சூட்சும முயற்சியின் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது கடைசிவரை வௌிப்படுத்தப்படமாட்டாது.அதுதான் இந்த நாட்டின் பாதுகாப்பின் ஒரு அம்சமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.