Header Ads



UNP செயற்குழுவில் இருந்து ரோஸி, ரஞ்சன் பொன்சேகா, அஜித் நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஸி சேனாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, அஜித் பி பெரேரா மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் நேற்று(29.01.2020) நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பட்டியலில் மேற்குறித்த நால்வரின் பெயர்களும் இடம்பெறவில்லை.

எனவே, இன்று (30.01.2020) பிற்பகல் நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறித்த நால்ரும் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.