Header Ads



ரணிலுடன் இணைந்து கட்சி Mp க்களை சந்தித்த சஜித்

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று -02- அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து முதல் முறையாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.

வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் மூலம செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய போவதாகவும், நாடாளுமன்றத்தை வலுப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சஜித் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இன்று நடந்த கூட்டம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.