Header Ads



"ரஞ்சனிடமிந்து கைப்பற்றப்பட்ட DVD களில் உள்ள விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது எவ்வாறு?"

ரஞ்சன் ராமநாக்காவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட இறுவட்டுக்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் எவ்வாறு வெளி வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

முதலில் இந்த இறுவட்டுக்களை பொலிசார் வசப்படுத்தி முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று -07- சிறப்புரிமை பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தன்னை கொலைசெய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் சதி செய்கின்றனர் என்ற குற்றத்தைச் சுமத்தினார். 

இந்த கருத்தினை முன்வைத்த நேரம் ரணில் விக்கிரமசிங்க சபையில் இருக்கவில்லை. எனினும் பிற்பகல் 5 மணியளவில் சபைக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க இக் குற்றச்சாட்டு குறித்து தனது பதிலை முன்வைத்தார். இதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

No comments

Powered by Blogger.